மது அருந்த தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை
By Dinamani, 02 Feb 2015
(2 Feb) பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மது அருந்துவதற்கு பணம் தர தந்தை மறுத்து விட்டதால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி, நாடார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் தமிழரசன்(30). மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்த தமிழரசன், தனது தந்தை பெரியசாமியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பெரியசாமி பணம் தர மறுத்ததால் வீட்டில் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட தமிழரசன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment