
(6 Feb) ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான மன நல ஆலோசனை கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பொதுவாக வளர்இளம் பருவத்தில் பள்ளி, கல்லூரிகளில் தனித்தனியாக பயிலும் மாணவ, மாணவிகள் மனரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆனால், மாணவ, மாணவிகள் சேர்ந்து பயிலும் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. மாணவ, மாணவிகள் ஒரு தலை காதல் ஏற்படும்போது தான் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பழங்காலத்தில் இருந்தே நடக்கின்றன. இப்போது விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன. குழந்தைகள், மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதைவைத்து ஒட்டுமொத்த சமூகத்தில் நற்பண்புகள் குறைந்துவிட்டது எனக் கூற முடியாது என்றார். மனதின் மையம் மூலம் இக்கல்லூரியில் பணியாற்றும் 40 பேராசிரியர்களுக்கு ஏற்கெனவே மனநல ஆலோசனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை
No comments:
Post a Comment