
(9 Jan) சென்னை கோயம்பேட்டில் அதிகமாக கைப்பேசியில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால், 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மனைவி கிரிஜா. இத் தம்பதியின் மகள் பவித்ரா (13). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பவித்ரா, அதிகமாக கைப்பேசியில் பேசி வந்தாராம். இதை அவர் பெற்றோர் கண்டித்தனராம். இதனால் மன வேதனையில் பவித்ரா சிக்கித் தவித்தாராம். இதையடுத்து பவித்ரா வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment