Friday, February 27, 2015
Saturday, February 7, 2015
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா, உடந்தையாக இருந்த சித்தி கைது!
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா, உடந்தையாக இருந்த சித்தி கைது!
By OneIndia Tamil, 06 Feb 2015 09:09 AM
(6 Feb) கிருஷ்ணகிரி: 6 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஜடையன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி டிரைவரான இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூஜா (6) என்ற மகள் இருந்தாள். பூஜா 6 மாத குழந்தையாக இருந்த போது தீபா இறந்து விட்டார். எனவே கோபால கிருஷ்ணன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி முத்துலட்சுமி (20) தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவர் என்பதால் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் லாரியில் வேலைக்கு சென்று விடுவார். இதனால் குழந்தை பூஜா, தனது சித்தி முத்துலட்சுமி மற்றும் தாத்தா பழனி (63), பாட்டி முத்தம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தாள். யு.கே.ஜி. படித்து வந்த பூஜா, நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினாள். இரவு தனது தாத்தா பழனி அருகே படுத்து தூங்கினாள். மற்றொரு இடத்தில் அவரது சித்தி முத்துலட்சுமியும், பாட்டி முத்தம்மாளும்தூங்கினார்கள். இரவு எழுந்த பழனி, சிறுமி பூஜாவை காணவில்லை என்று அலறியடித்தபடி கூறினார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூஜாவை தேடினார்கள். வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பூஜா விழுந்து கிடந்ததை பார்த்துள்ளனர். சிறுமியின் சாவில் சந்தேகம் அடைந்த சிலர் இது குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சிறுமி பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பூஜாவை அவளது தாத்தா பழனியே, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, கிணற்றில் வீசி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் சித்தி முத்துலட்சுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தனது குழந்தைக்கு, பூஜா இடையூறாக இருக்க கூடாது என்று பழனியுடன் சேர்ந்து முத்துலட்சுமி இந்த சதி திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது
சென்னை கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம்- நேபாள வாலிபர் கைது
By OneIndia Tamil, 07 Feb 2015 03:36 PMஇளம் சிறுமிகளுக்கு ஆக்சிடோசின் ஊசி போட்டு விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் கொடுமை
மீண்டும் தலைதூக்கும் 'ஆக்சிடோசின்' அரக்கன்: விபச்சாரத்தில் தள்ளப்படும் சிறுமிகள்
By OneIndia Tamil, 07 Feb 2015 06:24 PMமாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை
மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை
மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் தங்கிப்படித்த 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10–ம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தை அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. இருவரும் கூலி தொழிலாளர்கள்.
இவர்களுடைய மகள் லாவண்யா (வயது 15), ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றனர். ஆனால் லாவண்யா மட்டும் அறையில் இருந்தார். மற்ற மாணவிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போளூர் போலீசார் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் உருக்கமான தகவல்கள் இருந்தன. அதனை ஜவ்வாதுமலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருக்கமான கடிதம்
மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
‘‘அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.
பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன்’’.
மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால்தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் கேலி செய்ததால் விடுதியில் தங்கிப்படித்த 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10–ம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தை அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. இருவரும் கூலி தொழிலாளர்கள்.
இவர்களுடைய மகள் லாவண்யா (வயது 15), ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றனர். ஆனால் லாவண்யா மட்டும் அறையில் இருந்தார். மற்ற மாணவிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
ஜன்னல் வழியாக பார்த்தபோது லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போளூர் போலீசார் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் உருக்கமான தகவல்கள் இருந்தன. அதனை ஜவ்வாதுமலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருக்கமான கடிதம்
மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
‘‘அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.
பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன்’’.
மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால்தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது அருந்த தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை
மது அருந்த தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை
By Dinamani, 02 Feb 2015
(2 Feb) பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மது அருந்துவதற்கு பணம் தர தந்தை மறுத்து விட்டதால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி, நாடார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் தமிழரசன்(30). மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்த தமிழரசன், தனது தந்தை பெரியசாமியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பெரியசாமி பணம் தர மறுத்ததால் வீட்டில் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட தமிழரசன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதிகமாக கைப்பேசியில் பேசியதால் கண்டிப்பு: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
அதிகமாக கைப்பேசியில் பேசியதால் கண்டிப்பு: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
By Dinamani, 09 Jan 2015பள்ளி விடுதியில் 10 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
பள்ளி விடுதியில் 10 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
By Dinamani, 05 Feb 2015 01:20 PMஇருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் வளர்இளம் பருவத்தினருக்கு மன பாதிப்புகள் குறைவு
இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் வளர்இளம் பருவத்தினருக்கு மன பாதிப்புகள் குறைவு: மனநல நிபுணர் தகவல்
By Dinamani, 06 Feb 2015 08:20 PMபள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்
பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்
By Tamil Nadu, 07 Feb 2015 11:01 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியரை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தேவி, சுமதியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இனாம்காரியந்தலில் 9ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர். மாணவர்கள் முன்னிலையில் 2 ஆசிரியை மாணவியின் தலைமுடியை வெட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Comments (Atom)